சனி, 29 ஜூன், 2013

குறிக்கோள்



                             குறிக்கோள்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கென ஒரு குறிக்கோள் உண்டு. பணம் இருப்பவருக்குப் புகழ், வறுமையில் உழல்பவருக்குப் பணம், வசதி எனப் பலதரப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட இலட்சியங்கள், எண்ணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்பதா! என்ற ஆணவம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவர் தன் வாழ்க்கையில் என்றும் முன்னேற இயலாது. அடுத்தவருடைய கருத்தை எவனொருவன் ஊன்றிக் கவனிக்கிறானோ, செயல்படுகிறானோ அவனே வாழ்க்கையின் முதல் வெற்றிப் படிக்கட்டின் காலடியின் நிற்கிறான். ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒருவனுக்கு வெற்றிகள் வந்து சேரும். ஆனால் ஒருங்கிணைந்து ஊர் கூடித் தேர் இழுக்க, இழுக்கும் கைகள் தூயனவாக இருக்க வேண்டும். தன்னலம் பாராத் தூய மனப்பாங்கு கொண்டவையாக இருத்தல் வேண்டும். தன்னலம் கருதா ஆசிரியர் சமூகம் உருவாகத் தியாகச் சிந்தனைகள் உருவாக வேண்டும். முற்காலம்போல் எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளித்து விட்டு காந்திபோல் வாழவேண்டுமா! நமது தேசத்தலைவர்கள்போல் இருக்க வேண்டுமா! காலம் மாறிவிட்டதே எனக் கேள்விகள் எழலாம். ஒருவன் தனக்கென ஒரு இடம், தனது குடும்பத்திற்கென ஒரு இடம், தனது மதத்திற்கென ஒரு இடம், தனது நாட்டிற்கென ஒரு இடம் என வாழ்ந்தால் மட்டும் போதுமா? மனிதநேயம் மிகுந்தவர்களாக மாறுவது எப்போது? இத்தகைய சுயநல வட்டம் மாறும்போது விவேகானந்தர் காண விரும்பும் பாரதம் அமையும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது பாடப் பொருளுடன் வாழ்க்கையில் வாழ்வதற்கான பண்பாட்டு நெறிமுறைகளையும் இணைந்து கற்பித்தல் வேண்டும். என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறோம்! அந்நாள் நாம் நாள்காட்டியில் நாம் கிழித்துக் கசக்கிப் போடும் ஒருநாள் தான். அத்தாளில் உள்ள பொன்மொழிகளைப் படிப்பவரும் உண்டு. கசக்கிப்போடுபவரும் உண்டு. அது போல்தான் நாம் வாழும் வாழ்க்கை.
பகுத்தறியும் திறன் படைத்தவர்களாகிய  நாம்  எவ்வாறு வாழ்தல் வேண்டும்? மின்னி மறைவது மானிட வாழ்க்கை. என்றும் மாறாதிருப்பது அவர்தம் படைப்புகள். வாழ்க்கையில் உருட்டி விளையாடும் கண்ணாடிப் பந்துகளான சுற்றம், நட்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            உடல்நலம் இவற்றில் கவனம் கொள்ளவேண்டும். இறப்பது ஒரு முறைதான் அத்தகைய நாள் எது என நாம் அறிவதில்லை. அறிந்தவரும் இல்லை. அத்தகைய நாள் வருவதற்குள் வாழ்க்கைக்குப் பயனுள்ள நல்ல செயல்களைச் செய்யலாமே! நீ ஏன் வந்தாய்? எனது வீட்டு வேலைக்காகவே நான் இத்தகைய பணி என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என அடுத்தவரை அர்ச்சிக்கும் சுயநலம் மிகுந்த குணம் மென்மையான இதயத்திலிருந்து அகற்றப்படவேண்டும். சுயநல முள் ஆசிரியரிடம் இருந்தால் ஒளிமயமான மாணவர் சமுதாயம் என்ற ரோஜாவைப் பறிக்க இயலாது. பணம் சகடக்கால் போல் சுற்றி வரும். பழுத்த காலத்தில் மட்டுமே மரத்திலிருந்து கனிகள் விழுவதில்லை. இளம் வயதிலேயே இளங்காய்களும் விழுவதுண்டு. அதற்குள் நம்மாலான அறப்பணிகளைச் செய்தல் வேண்டும் என்ற நாலடியின் வழி வாழ வேண்டும். பாடத்துடன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், பண்பாட்டையும்  இணைந்து கற்பிக்க வேண்டும்.
ஆசிரியரால் அற்புதமான மனிதநேயம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இறக்கைகள் பறவைகள் பறப்பதற்கு மட்டுமல்ல இதைப்போல் ஆகாயவிமானமும் தயாரித்து அதில் நாமும் பயணிக்கலாம் என்று வாழ்ந்து காட்டிய மனிதனாக வாழ வேண்டும்.  அப்துல் கலாம் காணப்போகும் அறிவில் உலகத்திற்குச் சுயநலமற்ற, நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய  நல்ல மாணவர்களை உருவாக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஆசிரியர் சமூகம் தன்னலம் கருதாத தொண்டு செய்து வாழப் பழகுதல் வேண்டும்.
   உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் பிறருக்குத் தொண்டு செய்து வாழும் நல் உள்ளங்களுக்கு என்றும் அழிவு நேராது. ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம். வள்ளுவத்தின் வழி நிற்பதே ஆசிரியர்களுக்குப் பெருமை நிறைந்தது.

சில ஊர்-பெயர்கள்


சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:


இன்னாள் முன்னால்

1)பழனி திருஆவினன் குடி

2)திருசெந்தூர் திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை செருத்தணிகை

5)மதுரை மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் ஆருக் காடு!

9)சோளிங்கர் சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை நாலுகோட்டை

11)சிதம்பரம் தில்லை

12)தருமபுரி தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை திரு நல்லுர்

15)எக்மோர் எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை சின்ன தரி பேட்டை .

17) கோடம்பாக்கம் கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் குனசீல நல்லுர் (அ) தர்ம புரம்

வெள்ளி, 14 ஜூன், 2013

 இமெயிலை விசமிகளிடம் இருந்து பாதுகாக்க


உங்கள்


உங்கள் இ-மெயிலை, 70% ஹாக் செய்வது உங்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.30% மட்டுமே, ஆன்லைன் மோசடியாளர்கள் ஹாக் செய்கிறார்கள்(பண மோசடி, உங்கள் அக்கவுண்டில் இருந்து பல ‘கெட்ட மெயில்' உங்கள் மெயில் முகவரி புத்தகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்புதல், போன்ற பாதிப்புகள் இருக்கின்றன). அதனால, எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருங்க.
                                               

பாதுகாப்பு வழிமுறை:

மெயில் நுழைவு சொல்லை அறிய எந்த மென்பொருளும் இல்லை. சில இணைய தளங்களிலும், மெயில்களிலும் இப்படி பார்த்து இருக்கலாம். இந்த மெயில் முகவரிக்கு, ”நீங்கள் ஹாக் செய்ய விரும்பும் மெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்டை அனுப்புங்கள், நாங்கள் ஹாக் செய்து தருகிறோம்” என்று. உங்க பாஸ்வேர்டை எந்த காரணம் கொண்டும் தராதீர்கள். இவை உங்கள் மெயில் முகவரியை ஹாக் செய்திட நீங்களே உத்தரவு தருகிற மாதிரி.



கடைப்பிடிக்க வேண்டியவை:




1) கடவு சொல்லை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றுங்கள்.




2) “Hint Question" - கொஞ்சம் கஷ்டமாக உபயோகிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்ல, யார் வேண்டுமானாலும், உங்கள் மெயில் முகவரியைக் கொடுத்து விட்டு, ”Forgot My Password" என்று கிளிக் செய்தால், இந்த “Hint Question"ஐ தான் அவர்களிடமும் கேட்கும். உங்க செல்ல பேரு என்ன, உங்க அம்மா பேரு என்ன, பிறந்த ஊர் என்ன, பிடித்த நிறம்? இப்படி சில்லி தனமாக கேள்வி இருந்தா, உங்க நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் ஒரு யூகத்தில் பதில் அளித்து ஹாக் செய்திட முடியும்.)




3) கண்டிப்பாக “Secondary Mail" உபயோகிக்கவும். ”Secondary Mail" - இருந்தால், Hint Question கேட்காது, Forgot my password கிளிக் செய்தால், உடனே ஒரு activation link உங்க மெயில் ஐடிக்கு வந்துவிடும். யாரும் ஹாக் பண்ண முயற்சி செய்தாலும் தெரிந்து விடும்.



4) குறைந்தது 4 மெயில் ஐடி வைத்துக்கொள்ளுங்கள்.



ஒரு மெயில் ஐடி - யாருக்கும் கொடுக்கதீர்கள். ஆன்லைன் பாங்கிங் போன்ற மிகவும் முக்கியமான செயலுக்கு மட்டுமே உபயோகிக்கவும். மற்ற மூன்று மெயில் ஐடிக்கும் “Secondary mail id"- ஆக இந்த ஐடியை கொடுக்கவும். (யாருக்கும் தெரியாம ரகசியமாக வைச்சுக்கோங்க)

இரண்டாவது மெயில் ஐடி - நண்பர்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கலாம்.

மூன்று - நம்பகமான தளங்கள், சோசியல் நெட்வொர்கிங் தளங்கள் (FACEBOOK,ORKUT,TWITTER) போன்றவற்றில் சேருவதற்கு உபயோகிக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் மெயில் ஐடியை சோசியல் நெட்வொர்கிங் தளங்களில் சேர்வதற்கு உபயோகிக்க வேண்டாம்

நான்கு - இந்த முகவரியை ”குப்பை” (spam) மெயிகளுக்காக மட்டும், உபயோகிக்கவும். (அப்டினா? ஆசை யார விட்டது, பணம் சம்பாதிக்கலாம், உங்க மெயில் ஐடி தாங்க, அனுப்பி வைக்கிறோம் / இந்த தளத்தில் சேர்ந்தால் தான், இந்த தளத்தைப் பார்வை இடலாம், இதியாத்தி... இதியாத்தி..... இப்படிதெரியாத தளங்களில் எல்லாம் இந்த முகவரியை கொடுங்க. குப்பை மெயில் வந்தாலும், ஒரு பிரச்சனையும் இல்ல.

GMAIL உபயோகிப்பவர்களுக்கு:


ஜிமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தால், அக்கவுண்ட் பக்கத்திற்கு செல்லவும். யாஹூ உபயோகிப்பளர்கள், தங்கள் மெயிலில் உள்நுழைந்த பின், மேலே ”sign out", அருகில் ”My Account" கிளிக் செய்து, தங்கள் மெயில் செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.


Read more: http://www.anbuthil.com/2012/10/blog-post_13.html#ixzz2WEZ6f7Qi

தமிழ்மொழி - தொடக்கக்கல்வி - கற்றல்-கற்பித்தல் - ஓர் ஆய்வு

தமிழ்மொழி - தொடக்கக்கல்வி - கற்றல்-கற்பித்தல் - ஓர் ஆய்வு
                                           முனைவர். பி.ஆர் இலட்சுமி                                        
                                              தமிழ்த்துறை வல்லுநர்
                                                                        சென்னை-66.
அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றம் காரணமாகத் தமிழ்மொழி –கற்றல் - கற்பித்தலில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியைக் கற்க மாணவர்கள் மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்மொழியின் எழுத்துகளைச் சரிவரக் கற்காததினால் மாணவர்களின் படைப்புத்திறன் குறைந்துள்ளது. இதற்குத் தொடக்கக்கல்வியில் கற்றல்-கற்பித்தல் சிறப்புற நிகழ்தல் அவசியமாகிறது. இதன்வழி வகுப்பறையில் தமிழ்மொழியின் கற்றல்திறன் அதிகரிக்கும். தொடக்கநிலைக் கல்வியில் தமிழ் கற்றல்- கற்பித்தல் குறித்து இவ்வாய்வுக்கட்டுரை  எடுத்துரைக்கின்றது.
மொழி கற்றலின் நோக்கம்
மொழி கற்றலின் நோக்கம் பண்பாட்டை அறிந்து அதன்வழி நடத்தல், மொழியறிவை வளர்த்தல், சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல், தெளிவான முறையில் எழுதுவதற்கு உரிய ஆற்றலை வெளிப்படுத்துதல், தன்னை உணர்ந்து தானே நிற்றல் போன்றவையாகும்.
“எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைச் சுயவலிமையைக்  கொண்டு ஏற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை“ என்ற  சுவாமி விவேகானந்தர் கருத்துப்படி ஆசிரியர் கற்பித்தலை நடத்துதல் இன்றியமையாதது.                            
மொழி கற்பித்தலின் நிலைகள்
v  திட்டமிடல், வழங்கல், விளக்கல், படிகள், மதிப்பிடல் – மொழி கற்பித்தலின் நிலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது.
திட்டமிடல், வழங்கல், விளக்கல் போன்றவை விளையாட்டு முறையில் அமைந்தால் தொடக்கக்கல்வி நிலையில் தமிழ்மொழி கற்றல் சிறப்புடன் அமையும்.
1. கேட்டல்
2. படித்தல்
3. பார்த்தல்  
4. எழுதுதல்
5. நுகர்தல்
6. பகுத்தாய்தல்
7. தொடர்புடைய இணையைத் தேடுதல்
8. கருத்து உருவாக்கல்
9. வண்ணம் பற்றிய கருத்து
10. வடிவம்

போன்றவை தொடக்கக்கல்வி நிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கற்பித்தல் முறைகள்
தமிழ் மொழி கற்பதற்கு  எளிமையானது. இம்மொழியினை ஆர்வம்  உண்டாக்கும் முறையில் கற்பித்தல் ஆசிரியரின் கடமையாகிறது.
தமிழ்மொழி கற்பித்தலில் விளையாட்டுமுறை, நடிப்புமுறை, மேற்பார்வைப்படிப்புமுறை, செயல்திட்டமுறை, ஒப்பந்தமுறை, கண்டறி முறை, உரையாடல் சொற்பொழிவுமுறை, திட்டமிட்டதைக் கற்றல்முறை, மொழிப் பயிற்றாய்வுக்கூடமுறை, கட்டுரை படித்தல், பலர் கருத்துகளைத் திரட்டல், செயல்முறைக்கருத்தரங்கு, சொற்போர் போன்றவை பின்பற்றப்படுகின்றன.

மாணவன் சுயமாகச் செயல்படுதல், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு  இம்மூன்றிலும் சிறந்தோங்கும் முறையில்   தொடக்கக் கல்வி அமைதல் வேண்டும்.
v  மாணவர்களுக்கு ஆர்வமானவற்றைக் கற்பித்தல்
v  எளிமையான முறையில் ஆசிரியர்கள் பாடப்பொருளை அமைத்தல்.
v  நேர்முறை – சொல்லுக்கு முன் பொருள் – பருப்பொருள் கொண்டு கற்பித்தல்.
v  விதி, தத்துவம் முதலில் கூறி விட்டு உதாரணம் கொடுத்து விளக்குதல்.
v  ஒன்றைப் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பகுதிக்குச் செல்லுதல்
v  ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கற்பித்தல்.
v  துண்டு துண்டான கருத்துக்களைக் கூறாமல் முன் நடத்தியதுடன் தொடர்புபடுத்திக் கற்பித்தல்.
v  நடைமுறையில் பயன்படுத்தக் கூடியவற்றைக் கற்பித்தல்.
v  பல கருத்துக்கள் இருப்பின் அவற்றை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாகக்  கற்பித்தல்.
போன்ற கற்பித்தலின் முறையின்படி கற்றல் நடைபெறுதல் வேண்டும்.
மொழி கற்பிப்பதில் உரையாடல் பயிற்சி
மொழி கற்பிப்பதில் உரையாடல் பயிற்சி இன்றியமையாததாகும்.
v  இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் உரையாடுகிற திறன்
v  சரியான உச்சரிப்புடன், தெளிவாகப் பொருள் விளங்குமாறு உரையாடுதல்
v  செய்திகளை நுட்பமாகத்திரட்டி, உடல் அசைவுடன் விளங்குகிற உரையாடல்
v  நிகழ்ச்சிகளையும், சூழ்நிலைகளையும் அப்படியே கண்முன் காட்டுகிற வகையிலான உரையாடல்.
v  உரையாடலைப் பதற்றமில்லாமல், தெளிவாக, நுட்பமாகப் பயிற்றுவித்தல்.
போன்றவற்றில் தொடக்கக்கல்வி ஆசிரியர் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
துணைக்கருவிகள்
துணைக்கருவிகள் இல்லா வகுப்பறை மலர்களில்லாத் தோட்டம் போன்றது. துணைக்கருவிகளின் தெளிவு பற்றிய தரவுகள் தெளிவுபடக் கிடைக்காமையே காரணம் எனலாம். தொடக்கக்கல்வி நிலையில் பாடப்பொருளுக்கு ஏற்ற 
v  மின்அட்டை
v  சுழல் அட்டை
v  கரும்பலகைப் பயன்பாடு
v  உள்ளரங்க, வெளியரங்க விளையாட்டுத் துணைக்கருவிகள்
v  ஆசிரியரின் கற்பனைக்கேற்ற வகையில் சுயமாகத் தயாரித்த பாடப்பொருள் – தொடர்பான துணைக்கருவிகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியே தமிழ் கற்பித்தல் நடைபெறுவதால் மாணவன் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற திறன்களை எளிதில் அடைய இயலுகிறது.
இணையம் வழி தமிழ் கற்பித்தல்
தமிழ் எழுதும் முறை (மென்பொருள் பயன்பாடு), மின்அட்டை, இதழ்கள், மின் புத்தகங்கள், அசைவூட்டம், வலைப்பூக்கள் தொடர்பு  போன்ற நிலைகளில் இணையம் வழியாகத் தமிழ் கற்பித்தல் நடைபெறுகின்றன. இச்சூழ்நிலையில் தமிழாசிரியருக்கு இணையம் பற்றிய முழுமையான தெளிவு நிலை அவசியமாகிறது. அமெரிக்கா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா  போன்ற பல நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்மொழி கற்கப் போதுமான வசதிகள் இல்லை. இச்சூழ்நிலையில் பல நாட்டினரும் தமிழ்மொழியினைக் கற்க இணையவழித் தமிழ்க் கல்வி அவசியமாகிறது.
தமிழ் பேசும் இந்தியநாடு, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் இணையவழி தமிழ்க்கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902) வெறும் புத்தகம் படிப்பது மட்டும் படிப்பன்று குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலைத் தானாக மலரச் செய்வதே கல்வி என்றார்.  இன்றைய நிலையில் தமிழ்மொழி கற்பித்தலில் ஆசிரியர் வெறும் மனப்பாட மந்திரத்தை உருவேற்றும் கருவிகளாக மாறியுள்ளனர். இதன்விளைவாக மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்பாடு மிகவும் குறைந்து வருகிறது. இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டுதலின் பொருட்டு அதற்குத் தேவையான பாடங்களைக்  கற்கும் மாணவர்கள் தமிழ் படிப்பதைச் சுமையாகக் கருதுகின்றனர். தமிழ் படிப்பது வெறும் பண்பாட்டினைப் போதிக்கும் ஏட்டளவுக் கல்வியாய் மாறி இருப்பதைக்  காரணமாகக் கருதலாம். இத்தகைய சூழ்நிலையில் கற்பித்தலில் தமிழாசிரியரின் கடமை மிகவும் இன்றியமையாததாகிறது.
மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப நவீன அறிவியல் சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இவற்றினூடே பாடம் என்பது மாணவனுக்கு மிகவும் கடினமான கற்றல் முறையாகிறது. எனவே, அறிவியல் முறைகளுக்கேற்பத் தமிழாசிரியர்களும் அறிவியல் தொடர்பானவற்றை அறிந்து கொள்வது  அவசியமாகின்றது. எதையும் இணையம் வழி அறிந்து கொள்ளும் மாணவர் சமூகத்தினைத் தமிழ்ப்பண்பாட்டினை அறிந்து அதன்வழி தனது வாழ்க்கைப்பாதையினை அறிந்து கொள்ள இணையவழி தமிழ் கற்பித்தலும் அவசியமாகிறது.
இணையம் வாயிலாகக் கற்பித்தலின்போது
v  கணினியில் ஏற்படும் பிரச்சினைகள்
v  மென்பொருள் பற்றிய பயன்பாடு - அறியாமை
v  எழுத்துருப் பிரச்சினைகள்
v  அகராதிகளைத் தெளிவுறப் பார்க்கும் நேரமின்மை
போன்ற காரணங்களினால் இணையம் வழி - தமிழ் கற்பித்தல் நடைபெற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கணினி பற்றிய போதிய தெளிவுபெற www.eegarai.net, velanblogspot.com போன்ற வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.
v  நழுவல் தயாரிப்புகள்
v  அசைவூட்டம்
v  ஒளி, ஒலி வடிவத் தயாரிப்புகளைத் தரவேற்றம் செய்யக் கற்றுக் கொள்ளுதல்
போன்றவற்றை ஆசிரியர்கள்  கற்பித்தல் திறனில்  வெளிப்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.
மாணவர்கள் எழுதுவதற்கான பயிற்சிமுறை கற்பிக்க
v  கலிஃபோர்னியப் பல்கலைக்கழகம்
போன்றவை சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

இன்றைய மாணவர்கள் வரைகலைப் பயிற்சியை அதிகமாக விரும்புகின்றனர். Coolpaint, Kea colouring setup, Drawing for children, kea colouring book 3.7.0, paintslate (BENDIGE DESIGN) போன்ற மென் பொருட்களின் வாயிலாகப் பலவித வடிவங்களில் பயிற்சித்தாள் உருவாக்கலாம். மாணவனையும் படைப்பாற்றல் திறன் நிறைந்த பயிற்சித்தாளினை உருவாக்கம் அளிக்கப் பயிற்சி அளிக்கலாம். ‘படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடே விளையாட்டு‘ எனக் கல்வியாளர் நன் (NUNN) குறிப்பிடுகிறார். அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு தமிழ் மொழியில் வெளிப்படுமாயின் வகுப்பறையில் தமிழ்மொழியின் கற்றல்திறன் அதிகரிக்கும் என்பது இவ்வாய்வின் முடிவாகிறது.